Tuesday 7th of May 2024 06:44:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
தொற்று நோய் அதிகரிப்பால் ஜோ்மனியின்  சில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

தொற்று நோய் அதிகரிப்பால் ஜோ்மனியின் சில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள்!


ஜேர்மனியின் கோயிட்டிங்கன் நகரம் மற்றும் நோர்த் ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடுமையாக அமுல்படுத்துமாறு அப்பகுதிகளைச் சோ்ந்த உள்ளூர் அதிகாரிகள் பொலிஸாரைக் கோரியுள்ளனர்.

ஜோ்மனியில் கொரோனா தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார நிறுவனமான ரொபேர்ட் கோச் தெரிவித்துள்ளது. ஜோ்மனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 687 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்களுடன் நாட்டில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 189,822 ஆக அதிகரித்துள்ளதாக ரொபேர்ட் கோச் குறிப்பிட்டுள்ளது.

ஜேர்மன் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனீஸில் 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனையடுத்து நோர்த் ரைன் வெஸ்ட்பாலியாவில் உள்ள அந்த நிறுவனத்தின் பணியாற்றும் 6,500 பணியாளா்களையும் அவா்களது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்துள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஜெர்மனி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE